ஆண்டவர்தான் எனக்கு உணவளித்து, வழிக்காட்டி காப்பாற்றும் என்னுடைய மேய்ப்பராக இருக்கின்றார். எனவே எனக்கு ஒரு குறையும் கிடையாது.
அவர் என்னை பசுமையான, புதிதாக அரும்பியிருக்கும் புல்வெளியில் படுக்க வைத்து இளைப்பாற செய்கிறார். அவர் என்னை ஆடாமல், அசையாமல், ஓசையின்றி, அமர்ந்திருக்கும் நீர்நிலைகளுக்கு அழைத்து செல்கிறார்.
அவர் என் வாழ்வை என் ஆன்மாவை புதிதாக்கி, அதற்கு புத்துணர்வும், புத்துயிரும், புதுத்தெம்பும் கொடுக்கிறார். எனது உழைப்பின் பொருட்டல்ல, எனது வேண்டுதலின் பொருட்டல்ல, அவர் தம்முடைய நற்பெயரின் பொருட்டே என்னை நேர்மையான, நீதியான, சரியான பாதைகளில் நடத்தி செல்கிறார்.
ஆமாம். நான் கதிரொளி படாத, இருள்சூழ்ந்த, சாவின் நிழல் படிந்திருக்கும், ஆழமான பள்ளத்தாக்கு வழியாக கடந்து வர நேரிட்டாலும், நீர் எப்போதும் என் கூடவே இருப்பதால், எப்பேர்பட்ட தீங்கிற்கும் அச்சம் கொள்ளவோ, கலக்கம் அடையவோ மாட்டேன். என்னை பாதுகாக்கும் உமது கோலும், வழிக்காட்டும் உமது தடியும், என்னை ஆற்றி தேற்றுகிறது.
என்னை பகைப்பவரின் வெறுப்பவரின் கண்கள் காணும் வகையில், நீர் எனக்கு மாபெரும் விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். அங்கே என்னை பெருமைப்படுத்தும் வகையில், நறுமண தைலத்தை என் தலையில் ஊற்றி எனக்கு அருட்பொழிவு செய்கின்றீர். எனது பாத்திரங்களும் கோப்பைகளும் உமது ஆசிகளால் நிரம்பி வழிந்தோடுகிறது.
உண்மையாகவே, என் வாழ்வின் எல்லா நாட்களிலும், ஒவ்வொரு பொழுதிலும் நீர் செய்யும் நன்மைகளும், நீர் வழங்கும் ஆசிகளும், நீர் கொடுக்கும் கொடைகளும், நீர் காட்டும் இரக்கங்களும், உமது பேரன்பும் என்னை பற்றிக் கொண்டு என்னை பின்தொடர்ந்து ஊர்வலம் வருகிறது. என் ஆண்டவரின் வீட்டிற்குள் ஆண்டாண்டு காலமாய் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருப்பேன்.
( Reference Notes: Amplified Bible , The Message translation, God’s Word Translation, English Standard Version, King James Version, Tamil Original Bower Version (பரிசுத்த வேதாகமம் ), Tamil Ecumenical Common Language Version (திருவிவிலியம் ), Tamil Revised Version, Tamil Easy-to-read Version)
அவர் என் வாழ்வை என் ஆன்மாவை புதிதாக்கி, அதற்கு புத்துணர்வும், புத்துயிரும், புதுத்தெம்பும் கொடுக்கிறார். எனது உழைப்பின் பொருட்டல்ல, எனது வேண்டுதலின் பொருட்டல்ல, அவர் தம்முடைய நற்பெயரின் பொருட்டே என்னை நேர்மையான, நீதியான, சரியான பாதைகளில் நடத்தி செல்கிறார்.
ஆமாம். நான் கதிரொளி படாத, இருள்சூழ்ந்த, சாவின் நிழல் படிந்திருக்கும், ஆழமான பள்ளத்தாக்கு வழியாக கடந்து வர நேரிட்டாலும், நீர் எப்போதும் என் கூடவே இருப்பதால், எப்பேர்பட்ட தீங்கிற்கும் அச்சம் கொள்ளவோ, கலக்கம் அடையவோ மாட்டேன். என்னை பாதுகாக்கும் உமது கோலும், வழிக்காட்டும் உமது தடியும், என்னை ஆற்றி தேற்றுகிறது.
என்னை பகைப்பவரின் வெறுப்பவரின் கண்கள் காணும் வகையில், நீர் எனக்கு மாபெரும் விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். அங்கே என்னை பெருமைப்படுத்தும் வகையில், நறுமண தைலத்தை என் தலையில் ஊற்றி எனக்கு அருட்பொழிவு செய்கின்றீர். எனது பாத்திரங்களும் கோப்பைகளும் உமது ஆசிகளால் நிரம்பி வழிந்தோடுகிறது.
உண்மையாகவே, என் வாழ்வின் எல்லா நாட்களிலும், ஒவ்வொரு பொழுதிலும் நீர் செய்யும் நன்மைகளும், நீர் வழங்கும் ஆசிகளும், நீர் கொடுக்கும் கொடைகளும், நீர் காட்டும் இரக்கங்களும், உமது பேரன்பும் என்னை பற்றிக் கொண்டு என்னை பின்தொடர்ந்து ஊர்வலம் வருகிறது. என் ஆண்டவரின் வீட்டிற்குள் ஆண்டாண்டு காலமாய் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருப்பேன்.